ஞாயிறு, 15 நவம்பர், 2020

king

நம் புத்தகங்கள்  மறைத்த  உண்மைச் செய்திகளை நம் பிள்ளைகளுக்கு சொல்லி வளர்ப்போம்...

மாவீரன் என்றாலே அலெக்சாண்டர் என்றும் நெப்போலியன் என்றும் செங்கிஸ்கான் என்றும் கூறுவதை இனிமேலும் நாம் திருத்திக் கொள்ள வேண்டும்...

The Greatest Emperor of India - Rajendra chozan.

இந்தியத் துணைக் கண்டத்திலேயே மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர் மாமன்னர் ராஜேந்திர சோழர் மட்டுமே..

தனது ஆயுட்காலத்தில் 65 ஆண்டுகளை போர்க்களத்தில் செலவிட்டவர்.. 35 நாடுகளை போரில் வெற்றி கண்டவர்.. 

அவரது போர்ப்படையில் 60,000 யானைகளும், 5 லட்சம் குதிரைகளும் இருந்ததாக செப்பேடுகள் கூறுகின்றன..

இன்றைய காலகட்டத்தில் ஒரு பசுமாட்டிற்கு தினந்தோறும்  ஆகும் தீவன செலவு  200 ரூபாய்.. பத்து மாட்டிற்கு ஆகும் செலவு 2000 ரூபாய்.. ஒரு மாதத்திற்கான செலவு சராசரியாக 60,000 ரூபாய்.. ஒரு மாட்டை வளர்த்தால் அதன் மூலம் பெறப்படும் பால், தயிர் ,வெண்ணை, நெய் போன்றவற்றால் லாபம் ஈட்ட முடியும்...

ஆனால் எந்த லாபத்தையும் வழங்காத 60,000 யானைகளையும் 5 லட்சம் குதிரைகளையும் , ராஜேந்திர சோழன் பராமரிப்பது எதற்காக ??? 

போர் புரிவதற்காக மட்டும்தான் !!!

யானைப்படை  மற்றும் குதிரைப்படையே இலட்சக்கணக்கில் வைத்திருந்தவனின் , காலாட் படை எவ்வளவு இருந்திருக்க வேண்டும்?? 

தனது பதினேழாம் வயதில், இளவரசனாக இருந்து  ராஜேந்திர சோழன் வென்ற போரில் அவனுடன் இருந்த வீரர்களின் எண்ணிக்கை 90,000...
1016 ஆண்டுக்கு பிறகு சோழர் படை முழுவதும் அவன் கட்டுப்பாட்டில்தான் இருந்தது.. சுமார் 20 லட்சம் வீரர்கள் அவன் படையில் இருந்தனர்...
தன் சேனை முழுவதற்கும் நாளொன்றுக்கு ஆகும் சாப்பாட்டு செலவு எவ்வளவு இருந்திருக்க வேண்டும்?? பராமரிப்பு செலவு எவ்வளவு இருந்திருக்க வேண்டும்??  நிச்சயம் கோடிக்கணக்கில் இருந்திருக்கும்..

அத்துணை பேருக்கும் உணவு வழங்குவதற்கு, அவன் நாட்டை எவ்வளவு செழிப்பாக  வைத்திருந்துருப்பான் என்பதை கற்பனை செய்யுங்கள்.. மாதக்கணக்கில் வீரர்கள் வெளியூர் பயணம் மேற்கொள்ளும் போதும் அதற்கான உணவை கையில் எடுத்துச் சென்றிருப்பார்கள் அல்லவா?. தஞ்சை டெல்டா மாவட்டங்கள் விவசாயத்தில் உயர்ந்து நின்றதற்கு இராஜேந்திர சோழனே முதன் முதற் காரணம்...

எதிரிகள் தன் நாட்டைத் தாக்கி அழிக்க நேரிட்டால், தஞ்சையின் நெற்களஞ்சியங்கள் எல்லாம் அழிந்துவிடும்  என்ற ஒரே காரணத்திற்காக தனது தந்தை ராஜராஜ சோழன் ஆட்சி செய்த தஞ்சை மண்ணிலிருந்து ஜெயங்கொண்ட சோழபுரத்திற்கு தனது தலைமை இடத்தை மாற்றினான் ராஜேந்திரசோழன்...

உழவர்களின் மேல் அவ்வளவு வாஞ்சை !!!

ராஜேந்திர சோழன் தன் படைகள் ஓய்வு எடுப்பதற்காக காடுகளை வெட்டி சீர் படுத்தினான் என்பதற்கு  இன்றைய அரியலூர் மாவட்டத்தில் உள்ள " படைநிலை காடுவெட்டி" என்ற  ஊரே சாட்சியம்...

ஆறாயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள ஒரு நாட்டை , பத்தாயிரம் போர் கப்பலுடன் வெற்றி பெற்றான் என்பது நம் கற்பனைக்கு எட்டாதவை...இந்தியாவை பிடிப்பதற்கு கூட பிரிட்டிஷ், பிரஞ்ச் அரசுகள்  அவ்வளவு கப்பலில் வந்ததாகத் தெரியவில்லை...
 ஒரு நாட்டைப் பிடிக்க 6 மாதங்கள் முதல் 2 வருடங்கள் ஆகும் என்பதும், அத்தனை நாட்கள் தனது யானைகள் ,குதிரைகள் , காலாட் படை வீரர்களுக்கான உணவை தன்னுடன் எடுத்துச் சென்றான் என்றால் அவனின் உணவு தானிய உற்பத்தி எவ்வளவு இருந்திருக்க வேண்டும் ???

உப்பு நீர் சூழ்ந்த கடல்களின் இடையே, லட்சக்கணக்கான வீரர்களுக்கும் குதிரைகளுக்கும் மாதக்கணக்கில்  தூய்மையான குடிநீரை எவ்வாறு அவன் வழங்கியிருக்க முடியும்?? அசுத்தமான குடிநீரால் அந்த காலத்திலும் காலரா பரவியது என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.. அப்படியானால்,  கடல் நீரை சுத்தப்படுத்தும் அறிவியலை அறிந்தவனா அவன்??

போரில் அடிபட்ட வீரர்களின் காயங்களை ஆற்றுவதற்கு எத்தனை ஆயிரம் மருத்துவர்கள் அவனுடன் சென்று இருக்க வேண்டும்?? மருத்துவத்தில் பிரதிநிதித்துவம் பெற்ற குழுவை அவன் பெற்றிருக்கவில்லை என்றால்  60 ஆண்டுகளாக தொடர்  வெற்றி பெற்றிருக்க முடியுமா???

   தற்போதைய இந்தோனேஷியா, மலேசியா, சீனா, கம்போடியா, இலங்கை போன்ற நாடுகளை கப்பல் படையால் வென்றெடுத்த மாவீரன் அவன்... அதுவும் குறிப்பாக ஸ்ரீவிஜய நாடு பெரும் வணிக நாடாக விளங்கியது.. உலகிலுள்ள பல  வணிகர்களும் அங்கு வந்து போவது வழக்கம்.. நாட்டின் பொருளாதாரமான வணிகத்தை காப்பாற்ற எப்பேர்ப்பட்ட போர்வீரர்கள் அவசியம்?? 
அப்படிப்பட்ட சிறந்த போர்வீரர்களை  துவம்சம் செய்து பல நாட்டு வணிகத்தை கைப்பற்றியவன்  ராஜேந்திரசோழன்..

தமிழக வாணிப செட்டியார்கள், அவன் காலத்தில்தான் உலகம் முழுவதும் பயணம் செய்து பெரும்பணம் ஈட்டினர்...

நமது அறிவுசார் காப்பியங்களான, தொல்காப்பியம், சிலப்பதிகாரம், சிவபுராணம், திருக்குறள், மன்னரின் நூல்கள் உள்ளிட்ட பலவற்றையும் பாடசாலைகள் அமைத்து அதன் மூலம் பாதுகாத்தவன் அவன்..

உங்களுக்கு கோயில்கள் எதற்கு?  அதற்கு பதில் பள்ளிக் கூடங்களையும் மருத்துவமனைகளையும் கட்டுங்கள் என்று எந்த தற்குறியும் கேள்வி கேட்க வாய்ப்பு வழங்காதவன் அவன்...

முக்கியமாக,
பல்வேறு பொழுதுபோக்குகள் இருக்கும் இந்த நவயுக காலத்திலேயே நமக்குள் தேவை இல்லாத ஜாதி சண்டைகள் வருகிறது. ஆனால்  அந்த காலத்தில் பல ஜாதி பிரிவை உள்ளடக்கிய லட்சக்கணக்கான  போர் வீரர்கள் இடையே எந்தவித ஜாதி சண்டையும் வந்ததாக எந்த ஒரு வரலாற்று ஏடுகளும் கூறவில்லை...

ஆம்,
சமூக நீதியின் படி செம்மையான ஆட்சிபுரிந்த  சக்கரவர்த்தி அவன்... 

தமிழர்களின் ஒப்பற்ற தலைவன் அவன் ஒருவனே! 

மாமன்னன் ராஜேந்திர சோழன் -The Greatest

புதன், 11 நவம்பர், 2020

15 mins

கரோனா பயம் கொஞ்சம் மங்கிக்கொண்டு இருக்கும் சூழ்நிலையில் லைட்டாக ஒரு விஷயம். லைட்டாக எடுத்துக்கொள்ளுங்கள்.

வெளியூர் ஒன்றில் நண்பரின் நண்பருக்கு கரோனா முத்தமிட்டு இருக்கிறது. அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்ந்து விட்டார். அன்று இரவு உணவுக்கு கேட்டிருக்கிறார்.

இன்னிக்கி ஃபுட் இல்லீங்க என்று சொல்லியிருக்கிறார்கள். 

நான் பணம் தரேன். யாராச்சும் போய் வாங்கி வர முடியுமா என்று கேட்டிருக்கிறார். 

"இல்லீங்க ஆள் இல்ல "

"வாங்கிட்டு வர்ரவங்களுக்கும் பணம் குடுக்கறேங்க "

"பணம் பிரச்சனை இல்லீங்க. ஆள் இல்ல. உங்க உறவுக்காரங்க யாரையாச்சும் வாங்கிட்டு வரச் சொல்லுங்க "

"இல்லீங்க , இது சொந்த ஊரு இல்ல. நான் பேச்சிலர். ஃபிரண்ட்ஸும் யாரும் ஊர்ல இல்ல "

"அப்டியா ...சரி ..15 நிமிஷம் டைம் தரோம். அதுக்குள்ள நீங்களே போய் வாங்கிட்டு வந்துடணும்...சரியா ?"

செவ்வாய், 27 அக்டோபர், 2020

ஐயா.வ.உ.சிதம்பரம்_பிள்ளை







தமிழர்_தலைமைகள்
`வெள்ளையனை விரட்டுவது என்றால் நம்மவர்க்குக் கடல் ஆதிக்கம் வேண்டும். எனவே, தமிழர்கள் மீண்டும் கடல்மேல் செல்வது எவ்வாறு என்பதைத் திட்டமிட்டேன்' என அவர் ஆரம்பித்த சுதேசிக்கப்பல் நிறுவனம்தான் அவரை முன்னும் பின்னும் இரண்டு பீரங்கிகள் சகிதமாக நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்டு நாற்பது ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட காராணமாகியது.
வெள்ளைக்கார சிறை அலுவலர்கள் செக்கின் நுகத்தடியைச் சங்கிலியால் பிணைத்து சங்கிலியை இடுப்பிலே இறுகக் கட்டி அதைக் கைகளிலே பூட்டி மாடு போல் செக்கை இழுக்க வைத்தார்கள். இது அவரின் உடல்நிலையில் பெரும்பாதிப்பை ஏற்படுத்தியது. இதன் விளைவாக, அவரது உடல்நலம் படிப்படியாக சரிந்தது. இதனால் ஆங்கிலேய அதிகாரிகள் அவரை விடுதலை செய்யும் கட்டாயத்தில் தள்ளப்பட்டதாலும் மக்களின் தொடர் எதிர்ப்பாலும் மேல்முறையீட்டின் காரணமாகவும் ஆறாண்டுகளில் விடுதலையானார்.
செல்வச்செழிப்பில் பிறந்து வாழ்ந்தவர் ஏழை எளிய மக்களுக்காகவும் தேசத்திற்காகவும் தம் வழக்கறிஞர் பட்டம் முதற்கொண்டு அனைத்தையும் இழந்து பல்வேறு ஊர்களில் வறுமை நீங்காமலே வாழ்ந்து இறக்கிற பொழுது மகாகவி பாரதியின் "என்று தணியும் எங்கள் சுதந்திர தாகம்? என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்? " என்கிற வரிகளைக்கேட்டுக்கொண்டே கண்ணீர் கசிய உயிர் துறந்த #ஐயா_வ_உ_சிதம்பரம்_பிள்ளை அவர்களின் நினைவு நாள் இன்று (18/11/1936)

life

 When you think your life is going bad, Google about
Kashmir, Yemen, Syria, Burma, and Palestine.

Uploading: 860860 of 860860 bytes uploaded.

ஞாயிறு, 18 அக்டோபர், 2020

கணக்கு

ஒரு கோவில் மண்டபத்தின் வாசலில் இரண்டு வழிப் போக்கர்கள் அமர்ந்து இருந்தனர் .

இரவு நேரம்…, பெருத்த மழை வேறு , 

அப்போது அங்கே மற்றொருவரும் வந்து சேர்ந்தார். 

வந்தவர் . நானும் இரவு இங்கே தங்கலாமா என்று கேட்டார். 

அதற்கென்ன? தாராளமாய் தங்குங்கள் என்றார்கள்.

சிறிது நேரம் கழித்து எனக்கு சாப்பிட ஏதாவது கிடைக்குமா? 

என்றார் வந்தவர்.

இருவரில் முன்னவர் சொன்னார், 

என்னிடம் ஐந்து ரொட்டிகள் இருக்கின்றது என்றார். 

இரண்டாமவர் என்னிடம் மூன்று ரொட்டிகள் இருக்கின்றது என்றவர், 

ஆக மொத்தம் எட்டு ரொட்டிகள், 

இதனை நாம் எப்படி மூவரும் சமமாய் பிரித்துக்கொள்ள முடியும்? என்றார்.

 மூன்றாம் நபர், இதற்கு நான் ஒரு வழி சொல்கிறேன், என்றார். 

( தேவை உள்ளவன்தான் தீர்வு சொல்வான்!)

நீங்கள் உங்கள் ரொட்டிகளை, 

ஒவ்வொரு ரொட்டியையும் மூன்று துண்டுகள் போடுங்கள். 

இப்பொது இருபத்து நான்கு துண்டுகள் கிடைக்கும்! 

நாம் மூவரும் ஆளுக்கு எட்டு துண்டுகள் எடுத்து கொள்ளலாம் என்றார். 

இது சரியான யோசனை என்று அப்படியே செய்தனர்…

ஆளுக்கு எட்டு துண்டு ரொட்டிகளை சாப்பிட்டுவிட்டு உறங்கினார்கள்...

பொழுது விடிந்தது, மழையும் நின்றது. 

மூன்றாவதாய் வந்தவர் கிளம்பும்போது, உங்கள் உதவிக்கு மிக்க நன்றி, 
 
என்று சொல்லி *எட்டு தங்க நாணயங்களை கொடுத்து*, 

நீங்கள் உங்களுக்குள் பிரித்து கொள்ளுங்கள், 

என்று சொல்லிவிட்டு விடை பெற்றார்.

மூன்று ரொட்டிகளை கொடுத்தவர், 

அந்த காசுகளை சமமாகப்பிரித்து, 

ஆளுக்கு நான்காய் எடுத்துக்கொள்ளலாம் என்றார்*.
மற்றவர் இதற்கு சம்மதிக்கவில்லை*
மூன்று ரொட்டிகள் கொடுத்த உனக்கு மூன்று காசுகள்.

ஐந்து ரொட்டிகள் கொடுத்த எனக்கு ஐந்து காசுகள் என்று வாதிட்டார்.(3:5)

மூன்று ரொட்டிகள் கொடுத்தவர் ஒப்புக் கொள்ளவில்லை, 

என்னிடம் மூன்றே ரொட்டிகள் இருந்தபோதும், 

நான் பங்கிட சம்மதித்தேன்…

நிறைய இருப்பவன் கொடுப்பது ஒன்றும் பெரிய செயல் ஆகாது. 

அதனால் என் செய்கையே பாராட்டத்தக்கது, 

என்றாலும் பரவாயில்லை, சமமாகவே பங்கிடுவோம் என்றார்.

சுமுகமான முடிவு எட்டாததால், விஷயம் அரச சபைக்கு சென்றது*. 

அரசனுக்கு யார் சொல்வது சரி, என்று புரியவில்லை. 

நாளை தீர்ப்பு சொல்வதாய் அறிவித்து, அரண்மனைக்கு சென்றான். 

மன்னருக்கு இரவு முழுவதும் இதே சிந்தனை. 

வெகு நேரம் கழித்தே தூங்க முடிந்தது…

மன்னருக்கு, கனவில் கடவுள் காட்சி அளித்து*, 

தீர்ப்பும்,விளக்கமும் தந்தார். கடவுள் சொன்ன தீர்ப்பும், விளக்கமும் மன்னரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

அடுத்த நாள் சபை கூடியது. 

மன்னர் இருவரையும் அழைத்தார்.

மூன்று ரொட்டிகளை கொடுத்தவருக்கு ஒரு காசும்*, 

ஐந்து ரொட்டி கொடுத்தவருக்கு ஏழு காசுகளும் கொடுத்தார்*.

ஒரு காசு வழங்கப்பட்டவர், "மன்னா...!  இது அநியாயம்*. 

அவரே எனக்கு மூன்று காசுகள் கொடுக்க ஒப்புக் கொன்டார்" என்றார்*

அரசர் சொன்னார். நீ உன்னிடம் இருந்த மூன்று ரொட்டிகளை ஒன்பது ரொட்டித் துண்டுகளாக்கி கொடுத்தாய்*. 

அதிலும் எட்டு துண்டுகள் உன்னிடமே வந்து விட்டது*. 

அவன் கையில் இருந்த ஐந்து ரொட்டிகளை பதினைந்து ரொட்டித் துண்டுகளாக்கி கொடுத்தான்*. 

அவனுக்கும் எட்டுத்துண்டுகள்தான் கிடைத்தது*. 

ஆக நீ தருமம் செய்தது ஒரு துண்டு ரொட்டி*. 

அவர் தருமம் செய்தது ஏழு துண்டுகள்*. 

*ஒரு துண்டுக்கு ஒரு காசு வீதம் பிரித்துக் கொடுத்திருக்கிறேன்(1:7) என்றார்*..

ஆம் ! கடவுளின் கணக்கு இப்படி துல்லியமாகதான் இருக்கும்*…

நீங்கள் இழந்ததை எல்லாம் தருவது அல்ல, அவன் கணக்கு...

*எது உங்களுக்கு தகுதியானதோ அதுதான் உங்களுக்கு*. 

இது கடவுளின் ஏட்டு கணக்கு இல்லை*...

நாம் செய்யும் செயலில் இறைவன் இருக்கிறார் என்பதை மறவாதீர்கள்*
முழுமையாக தன்னை சேவைக்கு அர்பணித்துக் கொண்டவர்களை இறைவன் அறிவான்.

 Amudhan maheshvarma .